மட்டக்களப்பு நீதிமன்றத்திலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் கைதியொருவர் நீதிமன்ற சுவரால் பாய்ந்து தப்பி ஓடிய சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை நேற்று(02) பகல் 12 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று நீதவான் அறையில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த முயன்றனர்.

அப்போது கைதியின் கைவிலங்கை பொலிஸார் கழற்றியபோது குறித்த நபர் அங்கிருந்து ஓடி, நீதிமன்ற மதில் மீது ஏறி வெளியே பாய்ந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து தப்பி ஓடிய கைதியை தேடி, கைதுசெய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை  மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.