அமெரிக்காவில் கைது நடவடிக்கையின் போது பொலிஸாா் நடத்திய தாக்குதலில் கருப்பின இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக 7 ஆவதாக ஒரு காவலா் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
அந்த நாட்டின் டென்னஸீ மாகாணம், மெம்ஃபிஸ் நகரில் டய்ரி நிக்கல்ஸ் (29) என்பவா் ஜன.7 இல் காரை வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறி அவரை தடுத்து நிறுத்திய பொலிஸாா் அவரை கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக ஏற்கெனவே 6 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ப்ரெஸ்டன் ஹெம்ஃபில் (படம்) என்ற காவலா் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாா். வழக்கில் குற்றமற்றவா்கள் என்று நிரூபிக்கப்படும் வரை அவா்கள் அனைவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.