பயிர்களை அழிக்கும் உயிரினங்களை கொல்ல அனுமதி

பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே, அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் பயன்படுத்த விவசாயிகள் சுதந்திரமாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உட்பட அதிகப்படியான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் , சிக்கலைத் தீர்க்க வேறு வழிகள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.