பொருளாதார நெருக்கடி – தேர்தலுக்கு நிதி வழங்குவதில் சிக்கல்

நாட்டில் பொருளாதார நெருக்கடியினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அரச செலவினங்களை மட்டுப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைய, நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

இதனைத் தவிர, ஏனைய அத்தியாவசியமற்ற செலவுகளுக்கான ஒதுக்கீடுகளுக்கு நிதி அமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என மற்றுமொரு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.