தபால் மூல வாக்குசீட்டுகள் விநியோகிக்க முடியாது

நாளை (15) தபால் மூல வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்​ைசாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கேள்வி - வாக்களிப்பு தொடர்பில் உறுதியில்லையா?

தபால் வாக்குசீட்டுகள் விநியோகிக்கப்படும் என்று எங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று நடந்த இந்த கலந்துரையாடலில் நாளை இந்த தபால் வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

கேள்வி - அப்படியென்றால் மற்றொரு திகதி வழங்கப்படவில்லையா?

அதை தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்யும். இது சம்பந்தமாக தேவையான பணம் இல்லாமல் செய்ய முடியாது என்று அரசு அச்சக கூட்டுத்தாபனம் தெளிவாக விளக்கியுள்ளது.

2023 உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான தபால்மூல வாக்களிப்பதற்காக பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.