ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கோட்டை நீதிமன்றம் தடை !
சில பிரதேசங்களுக்கு உள்நுழைய முடியாது
கொழும்பின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது
இதற்கிடையே இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளுக்குள் உள்நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.