ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கோட்டை நீதிமன்றம் தடை !

சில பிரதேசங்களுக்கு உள்நுழைய முடியாது

கொழும்பின் சில பகுதிகளில்   ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் இன்று  கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது 

இதற்கிடையே இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளுக்குள் உள்நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உட்பட பலருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.