அம்பாறை மாவட்டத்தின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் நகரின் பிரதான வீதியில் இடம்பெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தாய் நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
இங்கு மாவட்ட தேசிய பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலாசார பண்பாட்டு நடனங்களும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், சொய்சா ஸ்ரீவர்த்தன உட்பட முப்படைகளின் பிரதானிகள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக