நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(20) முதல் ஆரம்பமாகின்றது.

ஜனவரி 23 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகி, கடந்த 17 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன.

இதனை முன்னிட்டு ஜனவரி 20 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய திங்கள் முதல் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி , மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.