எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு பயங்கர நிலநடுக்கம்..?


எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் – உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute (NGRI)) தலைவர் பூர்ணசந்திர ராதி (N Purnachandra Rao) இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது ரிக்டர் அளவுகோலில் எட்டு என விவரிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பூர்ணசந்திர ராதி மேலும் கூறுகையில்;

“.. உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மிகப் பெரியவை. மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள 18 நிலநடுக்க ஆய்வு மையங்கள் மூலம் நிலநடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மாநிலத்தில் பல கட்டிடங்கள் நிலத்தடியில் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் பூமியின் மேற்பரப்பு ஆண்டுக்கு ஐந்து சென்டிமீட்டர் வேகத்தில் நகர்கிறது. ஹிம்சலுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பிளவு நிலநடுக்கங்களுக்கு வழிவகுக்கும்..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.