காரொன்று ரயிலில் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

 கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்கல பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையாக போராடிய போதும், குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்திருந்தாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.