ரமழான் மாதம் அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும்  நிறைந்ததாக அமையப்  பிரார்த்திக்கிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கருணையும், நற்செயல்களும் நிறைந்த, தவறுகள் மன்னிக்கப்படும், புனிதமிகு அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மிகப்பெரும் மகிழ்ச்சிகர நிகழ்வை  நினைவுபடுத்தும் அருள் மிகு புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு,  அப்புனிதமிகு மாதத்தை அடைந்துகொள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நான் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் அடைந்துகொண்ட  முதல் புனிதமிகு ரமழான் மாதம் இதுவாகும்.

இப்புனிதமிகு மாதம் அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் அருளும் நிறைந்ததாக அமையப் பெற்று, இப்புனிதமிகு மாதத்தினை அனைவரும் அடைந்து, நோன்பு நோற்று நற்கிரியைகளில் ஈடுபடும் பாக்கியத்தை அடையவும், அனைவரது நற் செயல்களையும் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்" என்றார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.