உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.