ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மகளிர்  தின நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச பெண்கள் தின நிகழ்வு "கிழக்கு மற்றும் மேற்கில் பெண்களின் உரிமைகளும், மதிப்புகளும்" எனும் தொனிப்பொருளில் நாளை (12) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 க்கு கொழும்பு -07, இல 24, ஹோர்டன் பிளேஸில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் இடம்பெற உள்ளது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி டாக்டர் தீபிகா உடகம, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பரீனா றுசைக், சட்டத்தரணி சிவஸ்திகா அருலிங்கம் ஆகியோர் கலந்து கொள்வர். 

ஈரான் இஸ்லாமிய குடியரசிலிருந்து வருகை தந்திருக்கும் கலாநிதி ஸஹேரேஹ் மிப்ராஜி நிகழ்வில் விசேட பேச்சாளராகக் கலந்து கொள்கிறார். 

நிகழ்வுகளை ஸடடே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியை ஹனா இப்ராஹிம் நெறிப்படுத்துவார்.

மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள், கல்விமான்கள், இலக்கியவாதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.