வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும்  வடமேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை,இரத்தினபுரி  மற்றும் ஹம்பாந்தோட்டை  மாவட்டங்களிலும் இன்று  அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,  மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை,மன்னார் மற்றும் யாழ்ப்பாணம்  மாவட்டங்களிலும்  காலை வேளையிலும்  மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கடல் பிராந்தியங்களில் 
****************************

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம்,  கொழும்பு, காலி  ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான  கரையோரத்திற்கு அப்பால் உள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து  காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.