உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாம்: பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாமென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி, தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்தல் இந்த வருடம் இடம்பெறுவதற்கு மிகவும் குறுகிய சந்தர்ப்பமே தற்போது இருக்கிறது. தேர்தலை நடத்துவதற்கும் அரசாங்கம் எந்த தயாரும் இல்லாத நிலையே காணக்கூடியதாக இருக்கிறது.

அத்துடன் நாட்டின் தேர்தல் சட்டம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆகிய எதனையும் கருத்திற்கொள்ளாது அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பதறகான நடவடிக்கையை மேற்கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கிறது.

அதனால் நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்ற நிலை இருப்பதாகவே  கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது எமக்கு தெரிகிறது.

ஏனெனில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற இருக்கிறது. அதற்காக ஓகஸ்ட், பெப்டம்பர் மாதமாகும் போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றன. அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிலையே காணக்கூடியதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.