வெளிநாடுகளே உங்களுக்கு காட்டுப்பன்றிகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் தேவையா..?

பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கேள்வி ஏற்பட்டால் அவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிராக உள்ள தென்னந்தோப்புக்கு மிகப்பெரிய சேதம் டோக் மக்காக்கள், குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் ஏற்படுகிறது.



2022 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் 93 மில்லியன் தேங்காய்கள் குரங்குகள், மக்காக்கள் மற்றும் ராட்சத அணில்களால் அழிக்கப்பட்டுள்ளன என்றும், 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 180-200 மில்லியன் தேங்காய்களாக உயரக்கூடும் என்றும் அறிக்கைகள் காட்டுகின்றன.



இந்த விலங்குகளினால் ஏனைய பயிர்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.



குரங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா என்பதை ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை அமைச்சரினால் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

மேலும், சீனாவுக்கு மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் குரங்குகள் ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



இந்த குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் சீனாவில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களுக்கு இந்த விலங்கு வழங்கப்படும் என்றும், அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.



இந்த விலங்குகளை சீனாவுக்கு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் அமைச்சரவையில் இறுதி முடிவு அல்லது முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.