அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இளம் எழுத்தாளர்களுக்கான முழுநாள் பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று கண்டியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடுப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு சம்மேளனத்தின் தேசிய தலைவர் தேவஹுவ நிஜாமுதீன் தலைமையில் இடம்பெறும்.

கட்டுரை, கவிதை,சிறுகதை, சமூக வலைதளங்கள் முதலானவற்றை பயன்படுத்துவது எவ்வாறு போன்ற விடயங்களை உள்ளடக்கிய இந்த கருத்தரங்கில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களும் பங்கு பற்றமுடியும்.

இதில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு உணவு காகிதாதிகள் வழங்கப்படுவதுடன் பெறுமதி மிக்க சான்றிதழும் வழங்கப்படும்.

பங்குபற்ற விரும்புவோர் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளன தேசிய அமைப்பாளர் ரஷீத் எம். றியாழ் 0777798898 என்ற இலக்கத்துக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.