கடவுச்சீட்டுக்கான கைவிரல் அடையாளத்திற்காக இனி தலைநகர் செல்ல வேண்டியதில்லை!!

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை வழங்குவதற்காக இனி கொழும்பு மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லத்தேவையில்லை.......
எதிர்வரும் மாதங்களில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள ஆட்களை பதிவு செய்யும் திணைக்கள பிரிவில் கடவுச் சீட்டிற்கான கைவிரல் அடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதுடன் விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் சமர்பிக்க முடியும்.
கிழக்கு மாகாணத்தில் 6 இடங்களில் கைவிரல் அடையாளங்களை கடவுச்சீட்டிற்காக வழங்க முடியும்

அம்பாரை மாவட்டத்தில்
     சம்மாந்துறை பிரதேச செயலகம்
     பொத்துவில் பிரதேச செயலகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில்
       காத்தான்குடி பிரதேச செயலகம்
       ஓட்டமாவடி பிரதேச செயலகம்
       மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களம்
 திருகோணமலையில்
        கிண்ணியா பிரதேச செயலகம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.