⏩ தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திறைசேரிக்கு பாரம் சுமத்தாமல் இயங்கத் தயார்...

⏩ எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அதிகார சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன...

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது திறைசேரியை சார்ந்து இயங்கும் நிறுவனமாக மாறாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்  ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பிரகாரம், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அதிகார சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன.

2019-2020 ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம் (ஏ-9) மற்றும் உயர்தரம் பல்கலைக்கழகத்திற்கு சித்தியடைந்து, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் ஊழியர்களின் மகள்கள் மற்றும் மகன்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று (3) கலந்துகொண்ட  போது தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

5 ஆம் அண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைக்கு மாதம் 300 ரூபா வீதம் ஒரு குழந்தைக்கு 05 வருடங்களுக்கு 18,000 ரூபா புலமைப்பரிசில், G.C.E சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைக்கு 500 ரூபா புலமைப்பரிசில் இரண்டு வருடங்கள் வரை ரூபா 12,000 மற்றும் G.C. E சித்தியடைந்த பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவருக்கு மாதம் 1,000 ரூபா வீதம் 4 வருடங்களுக்கு ரூபா 48,000 உம் வழங்கப்பட்டன.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 2020 வரையான 09 வருட காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் ஊழியர்களின் பரீட்சையில் சித்தியடைந்த 529 மகன்கள் மற்றும் மகள்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செலவிடப்பட்ட முழுத்  தொகை 13.029 மில்லியன் ரூபாவாகும்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து 23 மில்லியன் ரூபாவை வங்கியில் நிலையான வைப்புத் தொகையைப் பேணுவதும், அதிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையும் இதற்காகப் பயன்படுத்தப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரி சபையின் பொது முகாமையாளர் கே. ஏ. ஜானக குறிப்பிட்டார்.
2021 தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. பரீட்சையில் சித்தியடைந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனைத்து ஊழியர்களின் பிள்ளைகளும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

நாட்டின் முக்கியமான அரச நிறுவனங்களுக்கிடையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை கொண்டு வருவதே தமது நோக்கமாகும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்  ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துக்களை வழங்கிய ராஜீவ் சூரியஆராச்சி,

“இந்த நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றை அடைக்கலம் வழங்குவதன் மூலம் நிறைவேற்றும் நிறுவனமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை அறிமுகப்படுத்த முடியும். நீங்கள் தங்குவதற்கு ஒரு இடத்தை உருவாக்குவது ஒரு பெரிய வரம்.  அரச துறையில் உள்ள எவருக்கும் அந்த தகுதி கிடையாது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை நாட்டின் மிக முக்கியமான மற்றும் உன்னதமான நிறுவனமாக மாற்றுவதற்கு நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தான்  ஆர். பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். இந்த நிறுவனம் செய்யக்கூடிய பணி மிகப் பெரியது. உழைக்க முடியாதவர்கள் என்ற கூட்டம் நம்மிடம் இல்லை. இதை  இரண்டு மூன்று முறை நிரூபித்தோம்.

இந்த நிறுவனம் 23 மில்லியன் நிலையான வைப்புத்தொகையைக் கொண்டுள்ளது. இந்த உதவித்தொகை திட்டம் 2012 இல் தொடங்கப்பட்டது. இன்றைய புத்தகப் பட்டியலின் விலையும், அன்றைய புத்தகப் பட்டியலின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு மாறிவிட்டன. நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில், இந்த 23 மில்லியனுடன் மேலும் 02 மில்லியனை சேர்த்து 25 மில்லியனாக மாற்ற முடிவு செய்கிறேன். அதற்கான குழுவுடன் சேர்ந்து முடிவு எடுப்போம். ஒவ்வொரு வருடமும் இந்தக் கணக்கில் ஒரு மில்லியன் ரூபாயைச் சேர்க்க நாங்கள் வேலை செய்கிறோம். இல்லையெனில் விலைவாசி உயர்வுடன் ஒப்பிடும் போது இந்த உதவித்தொகையை வழங்க முடியாது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரிபவர்கள் அனைவரும் திருப்திகரமாக பணியாற்றுவதற்கு தேவையான பின்னணியை உருவாக்குவது எமது பொறுப்பாகும். எனவே, அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். அமைச்சரவை அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அந்தச் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது ஆசிர்வாதத்தை வழங்குகின்றார். அவர் மக்கள் பக்கம் நிற்கும் மனிதர். மக்களுக்காக உழைக்க ஊழியர்கள்  நினைக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

இதன்போது, ​​தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, அதன் நிர்வாக சபை உறுப்பினர்கள், பொது முகாமையாளர் கே.ஏ. ஜனக, பிரதிப் பொது முகாமையாளர் மற்றும் ஏனைய புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.