கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
நாளையும்(05) நாளை மறுதினமும்(06) கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நாளையும்(05) நாளை மறுதினமும்(06) இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களை ஒருவருக்கு போதுமான அளவில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலைகள் சட்டதிட்டங்களுக்கு அமைய உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உறவினர்களைப் பார்வையிடும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.