இம்ரானை விடுவிக்க பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இம்ரான் கானை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கான உத்தரவை தலைமை நீதிபதி உமர் அதா பண்ட்யல், நீதிபதி முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வு பிறப்பித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி இம்ரான் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.