காஷ்மீரில் G-20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு

2023 ஆம் ஆண்டு G20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம்பெற்று வருகின்றது.



அதன்படி, G20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. 



டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது.



இந்நிலையில், G20 மாநாட்டில் சுற்றுலாதுறை தரப்பிலானா மாநாடு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் நாளை மறுதினம் ஆரம்பமாகி மூன்று நாட்கள் (22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 



இந்த மாநாட்டில் G20 நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.



இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் G20 அமைப்பில் உறுப்பினராக உள்ள சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. 



பிரச்சினைக்குரிய பகுதியில் மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ள சீனா இந்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.



இது குறித்து சீன வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில் எந்த விதமான சர்ச்சைக்குரிய பகுதியிலும் G20 மாநாட்டை நடத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற மாநடுகளில் சீனா பங்கேற்காது' என தெரிவித்துள்ளார்.



காஷ்மீரில் நடைபெறும் G20 மாநாட்டில் சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன நிலையில் துருக்கியும் காஷ்மீர் G20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 



அதேபோல், சவுதி அரேபியாவும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.