அரசாங்கம் வட மாகாணத்திற்கு வழங்கவுள்ள அதிகாரம்!
 

வடக்கு மாகாணத்திற்கு காணி அல்லது பொலிஸ் அதிகாரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமாக மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஏற்கனவே முன்வைத்துள்ள யோசனைகள் அடங்கிய அறிக்கை ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை வடக்கு மாகாண சபை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தயாராகி வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் அது தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை எனக்கூறியுள்ளார்.
எந்த நபரும் இந்திய பிரதமரை சந்திக்க முடியும் எனவும் அது தொடர்பாக அரசாங்கம் எந்த எதிர்ப்பையும் முன்வைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொள்ள உள்ள விஜயத்தின் பின்னர், இந்திய பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.