இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை.

மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை.

கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்.

காலி - அடிக்கடி மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை.

கண்டி - அடிக்கடி மழை பெய்யும்.

நுவரெலியா - அடிக்கடி மழை பெய்யும்.

இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்.

திருகோணமலை - சிறிதளவில் மழை பெய்யும்.

மன்னார் - சிறிதளவில் மழை பெய்யும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.