அரச மருந்தாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில்


அரச மருந்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (16) காலை 08 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் 23 மருந்தாளா்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.