திருமண மண்டபத்திற்கு புல்டோசரில் சென்ற மாப்பிள்ளை - அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்

திருமண மண்டபத்திற்கு புல்டோசரில் வந்த இன்ஜினியர் மணமகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.



மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் ஜலர் கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் அங்குஷ் ஜெய்ஸ்வால். இவருக்கு   திருமணம் நடைபெற்ற நிலையில் திருமண மண்டபத்திற்கு ஜெய்ஸ்வால் புல்டோசர் மூலம் வந்துள்ளார்.


மணமகன் ஜெய்ஸ்வாலுடன் அவரது உறவினர்கள் இரு பெண்களும் புல்டோசர் முன் அமர்த்து திருமண மண்டபத்திற்கு வந்தனர்.



இது தொடர்பாக வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் புல்டோசர் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் , 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.    

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.