தெஹிவளையில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

தெஹிவளையில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த 69 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.