தந்தையின் கண் முன்னே, மகனை விழுங்கிய சுறா


ரஷ்யாவை சேர்ந்தவர் விளாடிமிர் போபோவ் (23). இவர் தனது தந்தையுடன் எகிப்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.



ஹர்கடா என்னும் பகுதியில் உள்ள கடற்கரைக்கு விளாடிமிர் சென்றிருந்தார். கடலில் நீந்திக் கொண்டிருந்த அவரை, கரையிலிருந்து தந்தை கவனித்துக் கொண்டிருந்திருந்தார்.



அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரை கடுமையாகத் தாக்கியது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். சில நிமிடங்களில் தந்தையின் கண் முன்னேயே விளாடிமிரை முழுங்கியது சுறா.




இதுதொடர்பான் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளாடிமிரைக் கொன்ற சுறா மீனை பிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.