அரச நிறுவனங்களில்  மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெற்றிடம்

 மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு  தெரிவித்துள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையினால் அரச நிறுவனங்களின் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அஷோக தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் குறைந்தது 02 மொழிகளை அறிந்திருக்க வேண்டும் என்பதுடன், போட்டிப் பரீட்சையின் பின்னர் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அஷோக தெரிவித்தார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.