தக்காளிக்கு பதிலாக புளியை பயன்படுத்தும் மக்கள்

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகின்ற காரணத்தினால் தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்த வரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை குறைந்ததாலும் தக்காளி விலை அதிகமாகவே உயர்ந்து வருகிறது.

மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 65 இற்கும், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 இற்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் பின்னர் தக்காளி வருகை வெகுவாக குறைந்ததையடுத்து நேற்று (01) முதல் மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது.

நேற்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 இற்கும், சந்தையில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ100 இற்கும் விற்கப்பட்டது.

இன்று அதை விட உயர்ந்து உச்சத்தை தொட்டது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது.

சமையலில் தவிர்க்க முடியாத தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வழக்கமாக வாங்குவதை விட குறைந்த அளவே தக்காளியை வாங்கி சென்றனர்.

தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான மக்கள் தக்காளியை சமையலில் குறைக்கத் தொடங்கி உள்ளனர். தக்காளி இல்லாமல் செய்யக்கூடிய உணவு வகைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதே வேளை தக்காளிக்கு பதிலாக புளி மற்றும் எலுமிச்சையை சமையலில் பயன்படுத்தவும் தொடங்கி உள்ளனர். குறிப்பாக சாம்பாரில் தக்காளிக்குப் பதில், புளிப்பு சுவைக்காக புளி அல்லது மாங்காய் சேர்த்து வருகிறார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.