மீண்டும் அதிகரித்த டொலரின் பெறுமதி!
 
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 315.80 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 317.26 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 331.34 ரூபாவிலிருந்து 332.87 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 317.20 ரூபாவிலிருந்து 318.19 ரூபாவாகஅதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலையும் 329.50 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 319 மற்றும் 332 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.