சிறையில் உண்ணாவிரதம் இருந்த கடாஃபியின் மகன் மருத்துவமனையில் அனுமதி

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் ஹன்னிபால் கடாஃபி (Hannibal Gaddafi), லெபனான் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். 

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 1969 முதல் 2011 வரை லிபியாவின் சர்வாதிகாரியாக செயற்பட்ட முகமது கடாஃபியின் ஆட்சி  2011-இல் இடம்பெற்ற மக்கள் புரட்சியால் கவிழ்க்கப்பட்டது. 

சொந்த ஊரான சிர்டேவில் வைத்து கடாஃபியைப் புரட்சிப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

ஹன்னிபால் கடாஃபி, முகமது கடாபியின் ஐந்தாவது மகனாவார். 

லெபனானின் ஷியா இமாம் மவுடா அல் சடார், லிபியாவின் திரிபோலிக்கு 1978 இல் பயணம் மேற்கொண்டபோது காணாமல் போன வழக்கில், உண்மையை மறைத்ததாக ஹன்னிபால் கடாஃபி, பெய்ரூட்டில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளால் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட ஹன்னிபால், லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது கைது தொடர்பாக வழக்கு விசாரணை எதுவும் நடைபெறாததைக் கண்டித்தும் ஹன்னிபால் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் காரணமாக, அவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஹன்னிபால் உயிருக்கு ஆபத்தான நிலையில் லெபனான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.