இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
இன்று(13) முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

 நாடளாவிய ரீதியில் இன்று(13) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று(13), நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) ஆகிய 3 தினங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

இதற்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52021 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக வைத்தியர் நளின் ஆரியரத்ன கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.