இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுப்போம், நெருக்கடியில் சிக்கியபோது இந்தியாதான் தோளோடு தோள் நின்றது - மோடி



இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும்.  பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கை சந்தித்த பின் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள், தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்து விவாதித்தார்கள். 



அதன்பின்னர் இருநாடுகளுக்கும் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.நாகையில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் படகு இயக்கப்பட உள்ளது.




அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.



கடல்வழி, விமானப் போக்குவரத்து, எரிசக்தி வர்த்தகம், சுற்றுலாத்துறை, திறன் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் 2 நாடுகளின் உறவு மிக முக்கியம். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.



இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்' 



தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே, பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.