இரு பஸ்கள் மோதி விபத்து - 13 பேர் படுகாயம்

தங்கோவிட்ட பிரதேசத்தில் நேற்று (26) இரவு இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மற்றுமொரு பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.