காலாவதியான திரிபோஷா விநியோகம்

கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட கஹபொல ரெகிதெலவ்வத்த பகுதியில் உள்ள தாய் மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையத்திலிருந்து பத்து மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோஷா கையிருப்பு இன்று விநியோகிக்கப்பட்டுள்ளதாக திரிபோஷா பெற்ற தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.

3 முதல் 5 வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கவும், தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு திரிபோஷா பொதிகள் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளதாக தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு தவறு. அதற்காக வருந்துகிறோம் என சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ​​பேச்சாளர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் திரிபோஷா விநியோகம் செய்யப்பட்ட வீடுகளுக்கு தெரியப்படுத்தி புதிய திரிபோஷ வழங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும்தெரிவித்துள்ளார். இது எழுத்துப்பிழையா அல்லது பழைய திரிபோஷாவா என்பதைச் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.