வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட மாட்டாது

நாட்டில் இந்த மாதம் மீண்டும் QR குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார். ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. 

இது தொடர்பாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

இம்மாதம் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒதுக்கத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதும், இலங்கையில் சீராக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சவால்களால் அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தமாதம் முதல் QR முறைமையை நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இருப்பினும் அது குறித்த முடிவு எதனையும் இன்னும் எடுக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.