▪️லிபியாவில் புயல், மழை காரணமாக 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

▪️மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் உருவான டேனியல் புயல் கடந்த 10 ஆம் திகதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. இதன்போது மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

▪️டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியாவில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் இரண்டு அணைகள் உடைப்பெடுத்தன. 

▪️இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

▪️மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த டொ்னா நகருக்குள் வெள்ளம் வெகு சீற்றத்துடன் பாய்ந்து, அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருட்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச்சென்றது.

▪️இந்த வெள்ளத்தில் 2000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானவா்கள் காணாமற்போனதாகவும் பிரதமர் ஒசாமா ஹமாட் (Ossama Hamad) அறிவித்தார். 

▪️டொ்னா நகர அவசர கால மீட்புக்குழுவினா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலி எண்ணிக்கை 2,300-ஆக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

▪️எனினும், தற்போது லிபியாவின் கிழக்கு அரசின் உள்விவகார அமைச்சு குறைந்தது 5,300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.