நாட்டில் இடம்பெறும் பாதாள உலக மோதல்கள், கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கு புலனாய்வு அமைப்புகளையும், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சோதனை நடவடிக்கைகளுக்காக முப்படையினரை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடல் மார்க்கமாக தப்பிச் செல்பவர்களைக் கைது செய்ய கடற்படையினரும், விமானம் மூலம் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை கைது செய்ய இரகசியப் பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.