சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். 

போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். 

அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தயாராவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)