பதுளையிலிருந்து, பசறை மடுல்சீம வழியாக எக்கிரிய நோக்கி பயணித்த பஸ், நேற்று மாலை 5.45 அளவில் விபத்துக்குள்ளானது. எட்டு பேர் உயிரிழக்கக் காரணமாக பஸ் விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 31 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இந்த விபத்தில் பலியானவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்க என இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. காயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அனைத்து மருந்து வகைகளை வழங்கவும் போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.
சம்பவத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பிரகாரம் இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 31 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இந்த விபத்தில் பலியானவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்க என இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. காயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அனைத்து மருந்து வகைகளை வழங்கவும் போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.
சம்பவத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பிரகாரம் இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
