பிரபல மார்க்க பிரச்சாரகர் மௌலவி அம்ஹர் ஹகம்தீன் அவர்களை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக கம்பஹா மாவட்டத்தில் களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில், கம்பஹா மாவட்ட புத்திஜீவிகள், கல்விமான்கள் உள்ளிட்ட பலர் ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை இதுவரை நடாத்தியுள்ளனர். இதன்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் பங்கேற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

