இலங்கையிலுள்ள சீனர்களுக்கான அறிவுறுத்தல்

Rihmy Hakeem
By -
0
பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் அதிகமாக நடமாட வேண்டமென இலங்கையில் உள்ள சீனப் பிர​ஜைகளுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஜனாதிபதியால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட செயலணியுடனான கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (31) நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையில் சீன ஊழியர்கள் பணியாற்றும்,  நிறுவனங்களுக்கும் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கும் இது தொடர்பாக அறிவிக்கபட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Tamilmirror 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)