இலங்கை நாட்டின் 72வது சுதந்திர தினம் நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்ட நிலையில், கஹட்டோவிட்ட Wonderkids பாலர் பாடசாலையின் சிறார்களால் இன்றைய தினம் (05) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
பாலர் பாடசாலையின் சிறார்கள் வீதியில் தேசிய கொடிகளுடன் ஊர்வலமாக சென்றதுடன், வீதிகளில் பயணிப்போருக்கு இனிப்புகளை பகிர்ந்தும் மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.