கத்தாரில் புதிய உறுதிப்படுத்தப்பட்ட 38 கொரோனா வைரஸ் பதிவுகளை கத்தார் பொது சுகாதார அமைச்சகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதன்படி பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 439 ஆக உயர்ந்துள்ளது
மேலும் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய கத்தார் குடிமக்கள் 3 பேர் என பதிவாகியுள்ளது.

