பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற முகப்புத்தக விருந்து உபசார நிகழ்வு முற்றுகை இடப்பட்டுள்ளது. இதன்போது இளைஞர் யுவதிகள் அடங்கலாக 77 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 17 யுவதிகளும் அடங்குவர். இவர்களிடம் இருந்து கஞ்சா போதை மத்திரைகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். இதற்கு முன்னரும் இவ்வாறான முகப்புத்தக ஒன்றுகூடல் சம்பவங்களின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

