சிஐடி உத்தியோகத்தர்கள்‌ என கப்பம் கோரிய கம்பஹா, அத்தனகல்ல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த நால்வர் கைது

Rihmy Hakeem
By -
0


( மினுவாங்கொடை நிருபர் )

   தம்மைக் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்கள்‌ (CID) எனக் கூறி, கப்பம் கோரிய ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா, யக்கல, பிட்டுவல்கொட  பிரதேசத்தைச் சேர்ந்த பெண்‌ ஒருவரை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு, அவருக்கு பாதாள குழுக்களினால்‌ உயிர்‌ அச்சுறுத்தல்‌ இருப்பதாகத் தெரிவித்து, அதிலிருந்து பாதுகாக்க ஒரு இலட்சம்‌ ரூபா கப்பம்‌ கோரியுள்ளனர்.

   அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்‌, கம்பஹா குற்ற விசாரணைப்‌ பிரிவினருக்கு (04) வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம், ஒரு பெண்‌ உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்கள்‌ (05) கைது செய்யப்பட்டு, மல்வத்துஹிரிப்பிட்டிய பொலிஸாரிடம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ளனர்‌.

   கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்‌ 37, 40, 43 ஆகிய வயதுடைய  கம்பஹா, அத்தனகல்ல, வத்துரகம, பலாங்கொடை  ஆகிய பிரதேசங்களைச்‌ சேர்ந்தவர்களாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

   இவர்கள் (06) கம்பஹா நீதவான்‌ நீதிமன்றில்‌ முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார்‌ குறிப்பிட்டனர்‌.

( ஐ. ஏ. காதிர் கான் )


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)