-மகேஸ்வரி விஜயனந்தன்
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவுடன் அனுமதியுடனேயே ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை உருவாக்கியதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, அந்த அனுமதிக்குள் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்றார்.
இன்று (2) தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைக்கோர்க்கும் ஏனைய கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

