கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு முல்லேரியா IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நபர் கொழும்பு மாவட்டத்தை வதிவிடமான கொண்டவர் என சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இவரது குடும்ப உறுப்பினர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் டொக்டர் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் மற்றும் அவருடன் பயணித்த இத்தாலி நாட்டவர்கள் சென்ற இடங்கள் மற்றும் அவர்கள் தொடர்புபட்ட நபர்கள் குறித்த தகவல்கள் தற்பொழுது திரட்டப்பட்டு வருவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜாசிங்க கூறினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்(

