கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளத்தில் 4 விசேட வைத்தியசாலைகள்

Rihmy Hakeem
By -
0

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 4 விசேட வைத்தியசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மேற்படி 4 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களும், கொரோனா அறிகுறிகளுடனும் இனம் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை பரிசோதித்து சிகிச்சையளிக்க இந்த வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)